மல்லாகத்தில் இளைஞர் படுகொலை வடக்கு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடன் கூட்டமைப்பு பேச்சு-மாவை

176 0

யாழ். மல்லாகத்தில் நேற்று முன்தினம் இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுநடத்தியுள்ளது.

இச்சந்திப்பின் போது, சம்பவத்துடன் தொடர்புடையவரை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா இது தொடர்பில் தெரிவித்ததாவது:-

இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு தொடர்புடையவர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் பேச்சு நடத்தியுள்ளோம் என்றார்.

Leave a comment