ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

276 0

சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி பிற்பகல் 02.00 மணி வரை அந்த மனு பிற்போடப்படுவதற்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை அந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் எவரும் நீதிமன்றில் ஆஜராகியிருக்காமையின் காரணமாகவே மனு பிற்போடப்பட்டுள்ளது.

Leave a comment