விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

227 0

கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அசோல சம்பத் மற்றும் ஏனைய இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏனைய சந்தேக நபர்களை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment