ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை

226 0

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று (18) உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன் போது பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு தொடர்பில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 மனுக்களுக்கான விசாரணை, பியசாத் டெப்த் மற்றும் மூர்து பிரணாந்து ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Leave a comment