ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி நாளை கொழும்பில் பாரிய சத்தியாகிரகப் போராட்டம்!

269 0

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி நாளை கொழும்பில் பாரிய சத்தியாகிரகப் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதனுடன் தொடர்புபட்ட பெளத்த அமைப்புகளின் போராட்டங்கள் நாட்டில் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் சகல பெளத்த சிங்கள அமைப்புகளையும் ஒன்றிணைத்த சத்தியாகிரக போராட்டத்தை நடத்த பொதுபலசேனா அமைப்பினர் தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment