நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க சுதந்திரக் கட்சி ஆதரவு அளிக்காது-மஹிந்த

227 0

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் சர்ச்சை நிலவுவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே நேற்று (16) அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாது ஒழிப்பதற்கு ஆதரவு அளிக்காது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் இறையாண்மையை பாதுகாப்பதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் நாட்டிற்கு தேவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave a comment