இரத்தினபுரி நீதிமன்றத்தின் களஞ்சிய அறையில் கொள்ளை!

231 0

இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில்  வழக்குத் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சிய அறை உடைக்கப்பட்டு அங்கிருந்தப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நீதிமன்ற பாதுகாப்புக்கு இருந்த அதிகாரியொருவர் தெரிவித்த தகவலுக்கமைய,  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, அங்கு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமைக் குறித்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த அறையில் வைக்கப்பட்டிருந்த 4 கிலோகிராம் கஞ்சாவானது நீதிமன்றத்துக்கு அருகில் இருந்து பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தை சூழவுள்ள பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment