மஹிந்த குடும்பத்திற்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நெருக்கடியான சூழ்நிலை-நளின் பண்டார

231 0

கூட்டு எதிர்க்கட்சிக்குள் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒரு நெருக்கடியான சூழ்நிலை உருவாகி இருப்பதாக அரச நிர்வாகம், முகாமைத்துவ மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

குருணாகலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராகும் எண்ணத்தில் உள்ளனர்.

ஆனால் இவர்கள் இருவரையும் ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விரும்பம் இல்லை.

இதனால் மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியவற்றுக்குள் நெருக்கடியான சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment