ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது

210 0

பூஜாபிட்டிய, தொலபிஹில்ல பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, கண்டிக்கு பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து 12 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் இவ்வாறு சந்தேக நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, பட்டகொள்ளதெனிய பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை கலகேதர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பூஜாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment