நல்லாட்சி அரசாங்கம் பொதுமக்களால் வெறுக்கப்படும் ஒரு அரசாங்ம்-ரோஹித

213 0

இந்த நாட்டில் பொதுமக்களால் வெறுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்குமானால், அது இந்த நல்லாட்சி அரசாங்கமாகத் தான் இருக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

சிங்கள புதுவருடத்தை மாற்றினார்கள், மே 1 ஆம் திகதியை 7 ஆம் திகதிக்கு மாற்றினார்கள், வொட்காவை தண்ணீராக மாற்றினார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் பொது மக்கள் ஒரு புதிய அரசாங்கத்திற்காக காத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

களுத்துறை பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment