தொடரும் அஞ்சல் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு – பரீட்சைகள் திணைக்களத்தின் மாற்று ஏற்பாடு!

515 0

தமது பணிப்புறக்கணிப்பு இன்று ஆறாவது நாளாகவும் தொடர்வதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு எந்தவொரு தீர்வும் இதுவரை பெற்று தரப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அஞ்சல் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பரீட்சை கட்டணங்களை, பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. குறித்த காரியாலயங்களில் இதற்காக விசேட நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment