குருநாகலில் விபத்து இருவர் பலி

514 0

குருநாகல் – கண்டி வீதி நுகவெல பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தாய் மற்றும் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த தாயினால் உந்துருளி செலுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றும் ஓர் உந்துருளியுடன் மோதுண்டு விபத்து நேர்ந்துள்ளது.

இந்நிலையில், உந்துருளி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, தாய் மற்றும் குழந்தை வீழ்ந்துள்ள நிலையில் எதிர் திசையில் பயணித்த பேருந்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

22 வயதுடைய இளம் தாயார் ஒருவரும், இரண்டரை வயது ஆண் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Leave a comment