அரசாங்கத்திலுள்ளவர்கள் அலிபாபாவும் 118 திருடர்களும் என அழைக்கப்படுகின்றனர்- டளஸ்

235 0

அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் அலிபாபாவும் 118 திருடர்களும் என்றே முழு நாட்டிலும் ஊடகங்கள் வாயிலாக அழைக்கப்படுகிறார்கள் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்றம் எனக் குறிப்பிடப்பட்டு பாராளுமன்ற சந்தியில் தியவன்னா ஓயாவுக்கு முன்னாள் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வரையறுக்கப்பட்ட அலோசியஸ் அன்ட் சன் கம்பனி என மாற்ற வேண்டிவரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்க் கட்சியின் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்ற 118 பேர் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

Leave a comment