மாகாண சபைத் தேர்தல் டிசம்பரில் –ராஜித

204 0

மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (13) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

தேர்தல் எப்போது நடைபெறும் என்ற சமிக்ஞையை வழங்குமாறு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment