வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயின் வைத்திருந்த நால்வர் கைது

213 0

குளியாப்பிட்டிய, வீரபுர பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபரிடம் இருந்து 203 கிராம் 189 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளியாப்பிட்டிய, தியகமுல்ல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பொதுசந்தை அருகில் 2 கிராம் ஹெரோயினுடன் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அநுராதபுரம், ஹிமகந்திய பகுதியில் 2 கிராம் ஹெரோயினுடன் 39 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பேராதெனிய, பிலிமத்தலாவ பகுதியில் 5 கிராம் 770 மில்லி கிராம் ஹெரோயினுடன் 27 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment