சகல அமைச்சுக்களின் செயலாளர்களும் இன்று பாராளுமன்றத்துக்கு அழைப்பு

329 0

சகல அமைச்சுக்களையும் சேர்ந்த செயலாளர்கள் இன்று (12) பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் புதிய நிலையியற் கட்டளைகள் தொடர்பில் அறிவுறுத்துவதற்கே இவ்வாறு அவர்கள் பாராளுமன்றத்துக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் 150 பேர் இவ்வாறு கலந்துகொண்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக ஏனைய அரச அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் நீல் இத்தவெல மேலும் கூறியுள்ளார்.

Leave a comment