மைக்கல் கொலினின் பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்பின் அறிமுக விழா!

318 0

மறுபாதி குழுமம் நடாத்தும் வி.மைக்கல் கொலினின் பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்பின் அறிமுக விழா எதிர்வரும் 16-06-2018 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் 128, டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் பிரபல எழுத்தாளர் ஐ.சாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

கலைமுகம் பொறுப்பாசிரியர் திரு.கி. செல்மர் எமிலின் வரவேற்புரையுடன்
ஆரம்பமாகும் இந் நிகழ்வின் பிரதம அதிதியாக பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அவர்களும் சிறப்பதிதியாக கிளிநொச்சி வலய உதவிக்கல்விப் பணிப்பாளரும் எழுத்தாளருமான திரு.சு.ஸ்ரீ குமரன் (இயல்வாணன்) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பிரபல தொழிலதிபரும் கிருபா லேணர்ஸ் அதிபருமான 
திரு. அ.கிருபாகரன் அவர்கள் 
கெளரவ அதிதியாக கலந்து கொண்டு நூலின் முதற் பிரதியைப் 
பெற்றுக் கொள்ள 
நூல் தொடர்பான கருத்துரைகளை
எழுத்தாளர்கள் ச.இராகவன், சி.ரமேஷ் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

ஏற்புரையை நூலாசிரியர் வி.மைக்கல் கொலின் ஆற்றுவார்.

Leave a comment