விவசாயிகளுக்கு இலவச விதை நெல்

402 0

இரசாயன உரப் பாவனையின்றி, இயற்கைப் பசளைகளைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு, இலவசமாக விதை நெல்லை வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில் முதற்கட்டமாக 20 ஆயிரம் விவசாயிகளை இணைத்துக் கொள்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இயற்கை உரப் பாவனையில் ஐயாயிரம் விவசாயிகள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment