தயாசிறி திங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் செல்லத் தயார்

318 0

முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர  நாளை மறுதினம் (11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு செல்லத் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்ற விவகாரங்கள் காரணமாக செல்ல முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

பர்பசுவெல் டிரசரிஸ் நிறுவனத்திடமிருந்து தனக்கு கிடைத்த 10 லட்சம் ரூபா தொடர்பில் கடந்த வாரம்  வாக்கு மூலம் வழங்க வரவில்லையென குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது. இது குறித்து தயாசிறி எம்.பி.யிடம் வினவப்பட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment