மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியுடனே சுதர்ஷனிக்கு வாக்களிக்க வில்லை- பிரசன்ன

248 0

கடந்த பிரதி சபாநாயகர் தெரிவின் போது சுதர்ஷனி பெர்ணாந்து புள்ளேக்கு வாக்களிக்க முடியாது என்பதற்கான நியாயங்களை நாம் முன்வைத்த போது, கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள கம்பஹா குழுவினருக்கு விரும்பிய தீர்மானத்தை எடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தமக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அரசாங்கத்திலிருந்து விலகி வந்த 16 பேர் கொண்ட குழுவில் ஒருவரை கூட்டு எதிரணி சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்கு பிரேரிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், கூட்டு எதிரணியிலுள்ள சிலர் அவருக்கு வாக்களிப்பதைப் புறக்கணித்துள்ளனர். இதனால், கூட்டு எதிரணில் பிரிவு ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளன.

இது குறித்து சகோதர ஊடகமொன்று  அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

Leave a comment