ஜனாதிபதியின் செயலாளரை சபைக்கு அழைத்து விளக்கம் கேட்டால் பிரச்சினைக்கு முற்று- JVP

188 0

சபாநாயகர் தரகர் போன்று இல்லாமல், ஜனாதிபதியின் செயலாளரை பாராளுமன்றத்துக்கு அழைத்து 118 பேர் தொடர்பில் விளக்கம் கோரினால், பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் சபையில் கூறப்படும் விடயத்தை மீண்டும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் சட்ட மா அதிபருக்கும் தூது அனுப்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஜனாதிபதியின் செயலாளரை நேரடியாக சபைக்கு வருமாறு அழைத்து விளக்கத்தைப் பெற்றுக் கொண்டால், இதற்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave a comment