ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் பிரித்தானிய தம்பதிகள் உதவி?

365 0

is_mini2இலங்கையின் ஊடாக கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக கூறப்படும் 22 பேருக்கு, பிரித்தானியாவைச் சேர்ந்த கணவன் மனைவியான இருவர் உதவிகளை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய தேசிய புலனாய்வு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் அடங்கிய குறித்த குழுவினர், கடந்த ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இலங்கையின் ஊடாக ஆப்கானிஸ்தானுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்தாக கூறப்பட்டது.

இது தொடர்பில் டெல்லி – தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்ட இரண்டு கர்ப்பிணிப் பெண்களும் ஆப்கானிஸ்தானில் வைத்து குழந்தைகளை ஈன்றுள்ளதாக, அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.