கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நியமனங்களை கோரி ஆர்ப்பாட்டம்

228 0

வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை உடனடியாக வழங்கக் கோரி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

திருகோணமலை ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு நேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் பின்னர் வயது அடிப்படையில் குறைந்த பட்ச பட்டதாரிகளுக்கு மாத்திரம் தொழில் வாய்ப்பு வழங்கியமையை கண்டித்தும், மிகுதியாக உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை உடனடியாக வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தை பட்டதாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

மேலும் அண்மையில் வழங்கப்பட்ட தொண்டர் ஆசியர்களுக்கான நிரந்தர நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது குற்றஞ் சாட்டினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம அலுவலகத்தில் இல்லாத சந்தர்ப்பத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment