வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை

312 0
024நேற்றையதினம் திருகோணமலை கன்னியா பகுதியில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை என பெற்றோர்கள், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போன சிறுவர்கள் கன்னியா-மிகிந்தபுரத்தைச் சேர்ந்த யோகராஜா துஷானா அனு (வயது 09) மற்றும் எஸ். தனுஸ்க (வயது 11) என்பவர்கள் ஆவர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.