விபத்து- தாய் பலி மகன் படுகாயம்

351 0
dath-6இன்று காலை மாங்குளம் மூன்றுமுறிப்புச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் (வயது-15) படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பெண் மகனை பாடசாலைக்கு ஏற்றிச்சென்ற வேளையில் வீதியோரமாக தரித்து நின்ற டிப்பர் வாகனத்துடன் மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த பாடசாலை மாணவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.வீதிவிபத்தினால் இவ் வீதியில் கடந்த இரண்டு வார காலத்துள் 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.