100 நாள் வேலைத்திட்டம் பிரதமருடையது, 85 வருடம் பழைமை வாய்ந்தது- ஸ்ரீ சுமங்கள தேரர்

232 0

இந்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு  பொறுப்புதாரர் பிரதமர் தான் என்பதை ஜனாதிபதி சொல்லாமல் சொல்லியிருந்தார் என சியம் மகா பீடத்தின் ரங்கிரி தம்புளு விகாரையின் மகாநாயக்கர் கலாநிதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தில் உருவான 100 நாள் வேலைத்திட்டம் கடந்த 85 வருடங்கள் பழைமை வாய்ந்தது. இது அமெரிக்காவிலிருந்து பிரதிசெய்யப்பட்ட ஒன்று.

இதேவேலைத்திட்டத்தை ஐ.தே.க. கடந்த 90 களிலும் அறிமுகம் செய்ததாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், இந்த வேலைத்திட்டம் பிரதமருடையது என்பது உறுதியாவதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரங்கிரி தம்புளு உயன்வத்த ரஜமகாவிரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment