மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடனடியாக எதனையும் கூற முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தற்பொழுது ஆய்வு செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு 20 ஆம் திருத்தச் சட்ட மூலம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.