கடந்த தேர்தலில் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு எதிராகவே வாக்களித்தனர்- மைத்திரிபால

212 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் கிராமத்தின் அதிகாரத்தைக் கொடுத்தார்கள் என்று கூறுவதை விடவும் இந்த அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையை புறக்கணித்தார்கள் என்றே கருத வேண்டியுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பண்டாரநாயக்கவின் பொருளாதாரக் கொள்கை அரசாங்கத்துக்குள் செயற்படுவது இல்லையெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதை இலக்காகக் கொண்டே கட்சியை மறுசீரமைப்பதாகவும்  இன்று (03) நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment