நுவரெலியா தலவாக்கலை வீதியில் மண்சரிவு

355 0

நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரப் பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் ஒருவழி போக்குவரத்தாக மாற்றப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மண்சரிவு இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது

மண்மேடும், கற்பாறைகளும் சரிந்து விழுந்துள்ளதனால் இதனை சீர் செய்வதற்கு லிந்துலை பொலிஸாரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment