ஆனமடுவ ஒருங்கிணைந்த குடி தண்ணீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று ஆனமடுவ நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலய முன்றலில் நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின் மூலம் புத்தளம் மாவட்டம் புத்தளம், முந்தளம, மஹகுபுக்கடவல, ஆனமடுவ, நவகத்தேகம மற்றும் குருநாகல் மாவட்டம் கல்கமுவ, கொடவேஹர ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களும் சுத்தமான குடி தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பிரான்ஸ் மற்றும் இலங்கையின் 8625 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டவுள்ள இந்தத் திடடத்தின் மூலம் 125 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 81 ஆயிரத்து 741 பேர் சுத்தமான குடி தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.

