கொடிய இரவில் மூளைகளுக்கு சிதைமூட்டி வெறியாடிச் சென்றிருந்தன!

215 0

மூழைகளுக்கு சிதைமூட்டிய கொடிய இரவு

நடுநிசி இரவொன்றில்
ஓநாய்கள் வேட்டைக்குப் புறப்பட்டிருந்தன

அன்றைய இரவில்
வெறிகொண்ட ஓநாய்களிற்கு தாகம் தீர்க்க
மண்டைஓட்டு கபாலங்களில் நிறைந்த செங்குருதிகளோ
சதைப்பிண்டங்களோ தேவைப்பட்டடிருக்கவில்லை

ஓநாய்களின் தலைவனால்
மூழைகளைச் சிதைத்துவரவே
அன்றைய இரவில் உத்தரவிடப்பட்டடிருந்தது

மூளைகள் சிதைக்கப்பட்ட விலங்குகளை பின்னாளில்
வேட்டையாடிக் கொல்வது இலகுவானது என
அவைகள் நினைத்திருக்கலாம்

தீப்பந்தங்களுடன் புறப்பட்ட ஓநாய்கள்
கொடிய இரவில் மூளைகளுக்கு சிதைமூட்டி
வெறியாடிச் சென்றிருந்தன

பின் ஒரு நாளில்
வெறிகொண்ட ஓநாய்கள்
மூளைகள் சிதைக்கப்பட்ட விலங்குகளையும்
வேட்டையாடிக் கொன்றிருந்தன

கலியுகன்
31.05.2012

Leave a comment