புதைக்கப்பட்ட கஞ்சா

233 0

நிலத்­தில் கிடங்கு வெட்­டிப் புதைத்த நிலை­யில் 30 கிலோ­கி­ராம் கேர­ளக் கஞ்சா போதைப் பொருள் மீட்கப் பட்டது. அதை விற்க முற்­பட்ட குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட மற்­றைய இரு­வர் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

சம்­ப­வம் மடு சின்­னப்­பண்­டி­வி­ரிச்­சான் காட்­டில் நேற்­று­முன்­தி­னம் மாலை இடம்­பெற்­றது. கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் கஞ்சா கொள்­வ­னவு செய்­த­வற்­காக மாறு­வே­டத்­தில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து சென்ற சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னரே இந்த அதி­ர­டி­யில் ஈடு­பட்­ட­னர்.

கஞ்சா பொலித்­தீ­னில் பொதி­யி­டப்­பட்ட நிலை­யில் காட்­டுக்­குள் புதைத்து வைத்­தி­ருந்­த­மை­யைக் கண்டு அவர்­கள் அதிர்ச்­சி­ய­டைந்­த­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.அவற்றை வாங்க முற்­பட்­ட­போது கிடங்­கில் புதைக்­கப்­பட்ட நிலை­யி­லி­ருந்து சந்­தே­க­ந­பர் மீட்டு எடுத்­துக் கொடுத்­தார். அதற்­கு­ரிய பணத்தை வாங்­க­வென கஞ்­சா­வு­டன் நேர­டித் தொடர்­பு­டைய ஒரு­வர் அங்கு சென்று சற்­றுத் தள்ளி நின்­றுள்­ளார். கஞ்சா எடுத்­துக்­கொ­டுத்­த­வ­ரைப் அதி­ர­டிப்­ப­டை­யி­னர் கைது செய்­த­தும் மற்­றைய இரு­வ­ரும் தமது மோட்­டார் சைக்­கி­ளில் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.

கஞ்­சா­வு­டன் அவர் மடு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார். மன்­னார் நீதி­மன்­றில் நேற்று முற்­ப­டுத்­தப்­பட்­டார். அவர் மன்­னா­ரைச் சேர்ந்த பென­டிக்ற் றொபின்­சன் என்று அழைக்­கப்­ப­டு­கி­ற­வர் என்­றும் அவரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

Leave a comment