நீர் வழங்கல் சபை ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

273 0

தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் மேல் மாகாண ஊழியர்கள் இன்று (30) காலை 9.00 மணி முதல் 4 மணி நேர அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 1 மணி வரையில் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது பல கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய முறையில் பதிலளிக்காமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்கத்தின் கூட்டு முன்னணியின் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சபையின் பொறியியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அல்லாத உயர் அதிகாரிகள் இன்று முதல் சட்டப்படி வேலை செய்வதற்கும் தீர்மானித்துள்ளனர்.

நாளைக்குள் (31) தமக்கு தீர்வு கிடைக்காவிடின் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment