‘கோரா’ திடீர் மரணம்

274 0

ஹட்டன் பொலிஸ் வலயத்தின் மோப்பநாய் பிரிவில் இருந்த கோரா என்ற மோப்பநாய் நேற்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

08 வயதினை கொண்ட கோரா மோப்பநாய் கடந்த மூன்று வருடங்களாக ஹட்டன் பொலிஸ் வலயத்தில் சேவை புரிந்துள்ளதாகவும், சிவனொளிபாதமலை பருவகாலத்தின் போது சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதை பொருட்களை இனங்கண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

இந்த கோரா என்ற பொலிஸ் மோப்பநாய் மத்திய மாகாணத்தில் உள்ள மோப்பநாய்கள் பயிற்சி வழங்கும் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு பயிற்சி ஒன்றிற்காக அழைத்துச் சென்ற போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை, மட்டகளப்பு, பண்டாரவளை ஆகிய பொலிஸ் நிலைய பிரதேசங்களில் சேவைபுரிந்த கோரா என்ற இந்த மோப்பநாய் இறுதியாக ஹட்டன் தலைமை பொலிஸ் நிலையத்தில் 03 வருடங்களாக சேவை புரிந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

Leave a comment