ஆடை விற்பனை நிலையமொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

226 0

மாத்தறை, நுபே பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றின் மீது இன்று (29) அதிகாலை துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை 1.20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த விற்பனை நிலையத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment