லொறி மோதியதில் பாதசாரி பலி

249 0

கொடதெனியாவ, பல்லேகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளர்.

லொறி ஒன்று பின்னோக்கி செலுத்திய போது பாதையில் சென்ற பாதசாரி ஒருவர் மீது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொடதெனியாவ பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் லொறியின் ஓட்டுனரை கைது செய்துள்ளதுடன் குறித்த நபரை மினுவங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Leave a comment