விமானத்தில் பவுஸர் மோதி விபத்து- கட்டுநாயக்கவில் சம்பவம்

245 0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எயார்லங்கன் விமானத்தில் தண்ணீர் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(27) முற்பகல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தண்ணீர் ஏற்றிச் சென்ற பவுஸர் சாரதி கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், விமானத்தின் பின் பகுதி இந்த விபத்தில் சேதமடைந்துள்ளதாகவும் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பேச்சாளர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இவ்விபத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லாகூர் விமான நிலையத்திலிருந்து திரும்பிய பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave a comment