சட்டவிரோத சிகரெட் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போலியான பொலிஸார் கைது

232 0

சட்டவிரோத சிகரெட் விற்பனை தொடர்பான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போலியான இரு பொலிஸார் ராகமையில் வைத்து  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ராகம வியாபார நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஒரு லட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட பொலிஸ் அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கு முன்னரும் பலர் இதுபோன்று போலியான அடையாள அட்டைகளைக் காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment