அமைச்சர் மங்கள பொய்யின் பிறப்பிடம்- மஹிந்த சாடல்

216 0

அமைச்சர் மங்கள் சமரவீர சொல்வதையெல்லாம் கருத்தில் கொண்டு கேள்வி கேட்க வேண்டாம் எனவும் அவர் பொய்யின் பிறப்பிடம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டியில் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், அவர் இதனைக் கூறினார்.

இன்று மக்கள் வாழ்வதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இந்த அரசாங்கம் தொடர்ந்து நீடித்தால் மக்களுக்கு தற்கொலை செய்துகொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்த புதிய பொருளாதார திட்டத்தினூடாக இலவச கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகள் இருந்தது போன்றே வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a comment