நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் இன்று (25) அதிகாலை திறக்கப்பட்டுள்ளதென, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் தப்போவ நீர்த்தேக்கத்தில் இருந்து நிமிடமொன்றுக்கு 5,750 கன அளவு நீர் வெளியேற்றப்படுகின்றது.
இதன் காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ்வான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.