திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் நேற்று (24) பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியாவின் ஹிஜ்ரா வீதி, ஜாயா வீதி, கச்சக்கொடித் தீவு குட்டியா குளப் பகுதியின் வீட்டுத் திட்டம் உட்பட அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட குடுப்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.