2 பெண்கள் உட்பட மூவர் கொலை

217 0

மூன்று வெவ்வேறு பகுதிகளில் பெண்கள் இருவர் உட்பட மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தவுலகல, ஹலதிவல பகுதியில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான கணவரை தவுலகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை காலி, நாகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 62 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் சந்தேகநபர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் நாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் முல்லைத்தீவு, வட்டுவாக்கல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் தலை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு வடக்கு, கள்ளப்பாடு பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment