கொழும்பு – புத்தளம் புகையிரத சேவையில் இன்னும் பாதிப்பு

310 0

கொழும்பு – புத்தளம் புகையிரத மார்க்கத்தில், லுனுவில புகையிரத நிலையம் வரையில் மாத்திரமே ரயில் சேவை இடம்பெறுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

நாத்தாண்டிய – தும்மோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத வீதியில் ​ஹெமில்டன் நீரோடை பெருக்கெடுத்து அந்தப் புகையிரத வீதி நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக இந்த ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், லுனுவில – கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான அலுவலக புகையிரதங்கள் வழமையான நேரங்களுக்கு அமைவாக சேவையில் ஈடுபடுவதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

நேற்றைய தினம் முதல் கொழும்பு – புத்தளம் புகையிரத மார்க்கத்திலான புகையிரத சேவை லுனுவில புகையிரத நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a comment