நாட்­டில் நில­வும் கடும் மழை­யால் 8690 பேர் பாதிப்பு

189 0

தென் மேல் பரு­வப் பெயர்ச்சி நிலமை கார­ண­மாக நாட்­டில் நில­வும் கடும் மழை­யால் 10 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 8 ஆயி­ரத்து 690 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ மையப் பணி­ய­கம் தெரி­விக்­கின்­றது. காலி மாவட்­டத்­தைச் சேர்ந்­தோரே பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­தப் பணி­ய­கம் தெரி­வித்­தது.

கடும் மழைக் கார­ண­மாக ஏற்­பட்ட இடி, மின்­னல் தாக்­கத்­தால் இரு­வர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­க­வும் மர­மொன்று முறிந்து விழுந்­த­தன் ஊடாக இன்­னு­மொ­ரு­வர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­க­வும் இடர் முகா­மைத்­துவ மையப் பணி­ய­கம் தெரி­வித்­தது.

பல நீர்த்­தேக்­கங்­க­ளில் நீர் மட்­டம் சடு­தி­யாக உயர்­வ­டைந்­துள்­ளது. மலை­ய­கத்­தில் ரந்­தெ­னி­கல நீர்த்­தேக்­கத்­தின் நீர் மட்­டம் 83.9 வீதத்­தி­னா­லும், கொத்­மலை நீர்த்­தேக்­கத்­தின் நீர் மட்­டம் 73.1 வீதத்­தி­னா­லும் உயர்­வ­டைந்­துள்­ளது. தெதுரு ஓய­வைன் 4 வான் கத­வு­கள் திறக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் உட­வ­லவ நீர்த்­தேக்­கத்­தின் ஒரு வான் கதவு திறக்­கப்;பட்­டுள்­ள­தாக நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.

Leave a comment