தொடர்ச்சியாக நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, தெஹியோவிட்ட மற்றும் நிவிதிகல ஆகிய கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்றும்(21) நாளையும் (22) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்