வடக்கின் நினைவேந்தல்கள் இனவாதமாகும் -கோட்டாபய

210 0

இனவாதத்தினை தூண்டுவதற்கு நல்லிணக்கத்தினை ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஓகந்தர – தக்ஷிணாராம விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இனவாதத்தினை தூண்டும் வகையில் தீவிரவாதிகளை நினைவுகூர இடமளிக்கும் செயல் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ,

உயிர்த்தியாகங்களைச் செய்து பெற்றுக்கொண்ட சுதந்திரம் குறித்தும், வரலாறு குறித்தும் புரிதலின்றி, வௌ;வேறு சக்திகள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக காட்டிக்கொடுப்புகளை மேற்கொண்டால், மீண்டும் அதுபோன்ற ஒரு யுகம் ஏற்பட இடமுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment