எனது தந்தையை போன்று வேறு எவரும் மிரட்டல்களுக்கு முகங்கொடுத்ததில்லை-சதுர சேனரத்ன

216 0

இராணுவத்தினருக்கும் தீவரவாதிகளிக்கும் இடையிலான வித்தியாசத்தை தன்னுடைய தந்தை நன்கு அறிவார் என அமைச்சர் ராஜித சேனரத்னவின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (20) ஹங்வெல்ல பகுதியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்ககும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தந்தையை போன்று வேறு எவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிரட்டல்களுக்கு முகங்கொடுத்த அமைச்சர் தென் மாகணத்தில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனரத்ன தெரிவித்துள்ளார்.

அவ்வாரே தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை செய்யப்பட உள்ளவர்களின் பெயர் பட்டியலில் தனது தந்தை பெயர் இருந்ததால் அவருக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்நததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கும் தீவரவாதிகளிக்கும் இடையிலான வித்தியாசத்தை தன்னுடைய தந்தை நன்கு அறிவார் எனவும் ஊடகங்களும் மக்களும் அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a comment