காலி முகத்திடல் கடற் பிரதேசத்தில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நேற்று மாலை குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிப்பிடிய – ருக்மலே பிரதேசத்தினை சேர்ந்த 75 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.கோட்டை காவற்துறை சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.