பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய இளைஞர் கைது

211 0
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரை அங்குலானை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் அங்குலானை பகுதியில் உள்ள பல வீடுகளில் பொருட்களை திருடியுள்ளதாகவும் மேலும் பல்வேறு வகையான குற்றங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடமிருந்து தங்க நகைகளையும், தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அங்குலானை, கடற்கரை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மொரட்டுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஜூன் மாதம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a comment