புதுக்குடியிருப்பில் நேற்றுக் காற்றுடன் பெய்த மழைகாரணமாக தற்காலிக வீடுகள் பல சேதமடைந்தன. பயன்தரு மரங்கள் பல முறிந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
பிற்பகல் 3.30 தொடக்கம் 6 மணிவரை புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு, முள்ளியவளை போன்ற பகுதிகளில் கடும் காற்றுடன் மழை பெய்தது. இடையிடை மின்னல்கள் பதிவாகின. பல இடங்களில் மின்னல் தாக்கியுள்ளது.
அதனால் பலரது வீட்டில் உள்ள இலத்திரனியல் பொருள்கள் பழுதடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
கைவேலிப் பகுதியில் இரண்டு தற்காலிக வீடுகள் சேதமடைந்துள்ளன. பயன்தரு மரங்களும் முறிந்துள்ளன. மருதங்குளம் சுரேஸ் வீட்டுத்திட்ட பகுதியிலும் இரண்டு தற்காலிக வீடுகள் காற்றால் தூக்கிவீசப்பட்டுள்ன. ஜம்பதிற்கு மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
மக்களின் வீடுகள் பாதிப்புக் குறித்து கைவேலி கிராம அலுவலர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை தறப்பாள்கள் வழங்க ஏற்பாடு செய்து தருவதாகக்கூறி பாதிக்கப்பட்ட விபரங்களை எடுத்துவிட்டு சென்றுள்ளார் என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.